தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி - கெஹெலிய ரம்புக்வெல்ல!


நாட்டில் 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் இயங்கிவரும் வைத்திய பீடங்களுக்கு இணையாக இந்த புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்போது 10 வீதமான மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கவும் குறித்த மருத்துவக் கல்லூரிகள் இணங்கியுள்ளன.

கருத்துகள்