சா/த அழகியல் கற்கைசார் பாடநெறிகளுக்கான செயன்முறை பரீட்சைகள் 2 ஆம் திகதி முதல் ஆரம்பம்


சா/த செயன்முறை பரீட்சைகள் 2ஆம் திகதி முதல் ஆரம்பம்
சா/த அழகியல் கற்கைசார் பாடநெறிகளுக்கான செயன்முறை பரீட்சைகள் 2 ஆம் திகதி முதல் ஆரம்பம்

 2022 கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் அழகியல் கற்கைசார் பாடநெறிகளுக்கான செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த பரீட்சைகளை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நடத்தப்பட்ட செயன்முறைப் பரீட்சைகளுக்கு பயன்படுத்தப்பட்ட மதிப்பீட்டு முறைமையே மாற்றங்களின்றி இவ்வருடமும் பின்பற்றப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் தமக்கான பரீட்சை அனுமதி அட்டைகளை எதிர்வரும் நாட்களில் தபால் மூலம் பெற்றுக்கொள்ள முடியுமென பரீட்சைகள் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை 1911 எனும் துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி பெற்றுக் கொள்ளலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்