உயர் கல்வி மற்றும் வழிகாட்டல் கருத்தரங்கு - 2023
கண்டி எனசல் மத்திய கல்லூரியில் இம்முறை க.பொ.த. சாதாரண பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் தொழில் வழிக்காட்டல் கருத்தரங்கொன்றினை கண்டி எனசல்கொல்ல மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர் பேராதெனிய பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸுடன் இணைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) நடாத்தியது. கல்லூரி அதிபரின் தலைமையில் இடம்பெற்ற இந்த கருத்தரங்கின் விரிவுரைகளை பேராதெனிய பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் உறுப்பினர்கள் நடாத்தினர். கருத்தரங்கின் இறுதியில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
கருத்துரையிடுக