களுத்துறை பிரதேசத்தில் 12 மணிநேர நீர் விநியோகத் தடை
அளுத்கம, மத்துகம, அகலவத்த ஒன்றிணைந்த நீர் வழங்கல் திட்டத்தில் அத்தியவசிய விஸ்தரிப்பு வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் எதிர்வரும் 14ஆம் திகதி (14.06.2023) புதன்கிழமை மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 9.30 மணி வரையிலான 12 மணிநேர நீர் விநியோகத்தடை பின்வரும் பகுதிகளில் அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
வாத்துவ, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, கட்டுக்குருந்தை, நாகொட, பயாகல, மக்கொனை, போம்புவல, அளுத்கம, தர்காநகர், பெந்தோட்டை, களுவாமோதர, மொரகல்ல, பிளம்னாவத்த ஆகிய பகுதிகள் நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்படும்.
கருத்துரையிடுக