யாழ்ப்பாணத்திலிருந்து துபாய்க்கு ஏற்றுமதியாகும் கதலி வாழை
நவீன விவசாய மயமாக்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் இருந்து துபாய்க்கு வாழைக்குலைகளை ஏற்றுமதி செய்யும் திட்டம் நேற்று(03) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழ்.நிலாவரை சந்தியில் அமைக்கப்பட்டுள்ள வாழைக்குலை பதப்படுத்தல் நிலையத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
கோப்பாய், உடுவில், தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட வாழைக்குலைகளே இவ்வாறு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.
கொள்முதல் செய்யப்படும் கதலி வாழைக்குலைகள் நிலாவரையில் உள்ள வாழைக்குலை பதப்படுத்தும் நிலையத்தில் பதப்படுத்தப்பட்டு, அங்கிருந்து நேரடியாக துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.
இந்த திட்டத்தின் முதற்கட்டமாக 10000 கிலோகிராம் வாழைக்குலைகளை வாரந்தோறும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக