எரிபொருள் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்!
பண்டிகை காலத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் அளவை எதிர்வரும் ஒரு வாரத்திற்கு அவ்வாறே தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு எரிபொருள் அளவை அதிகரிக்க கடந்த ஏப்ரல் 4ம் திகதி தீர்மானிக்கப்பட்டது.
QR முறையின் கீழ் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் அளவை எதிர்வரும் ஒரு வாரத்திற்கு தொடர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதிகரிக்கப்பட்ட அளவு விபரங்கள்
முச்சக்கர வண்டிகளுக்கு 5 லீட்டரில் இருந்து 8 லீட்டராகவும்,
மோட்டார் சைக்கிள்களுக்கு 4 லீட்டரில் இருந்து 7 லீட்டராகவும்,
பேருந்துகளுக்கு 40 லீட்டரில் இருந்து 60 லீட்டராகவும்,
கார்களுக்கு 20 லீட்டரில் இருந்து 30 லீட்டராகவும்,
லொரிகளுக்கு 50 லீட்டரில் இருந்து 75 லீட்டராகவும்,
சிறப்பு நோக்க வாகனங்களுக்கு 20 லீட்டரில் இருந்து 30 லீட்டராகவும்,
வேன்களுக்கு 20 லீட்டரில் இருந்து 30 லீட்டராகவும்,
land vehicles 15 லீட்டரில் இருந்து 25 லீட்டராகவும்,
கருத்துரையிடுக