நாட்டில் ஆற்றல் கொண்ட இளம் அரசியல்வாதிகள் உருவாகும் காலம் வந்துள்ளது - முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

நாட்டில் தற்போது வேலைசெய்யக்கூடிய அரசியல்வாதிகள் குறைந்த அளவிலேயே இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஆற்றல் கொண்ட இளம் அரசியல்வாதிகள் உருவாகும் காலம் வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அத்தனகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.


கருத்துகள்