நாட்டில் மதுபான விற்பனையில் பாரிய வீழ்ச்சி
நாட்டில் மதுபான விற்பனையில் பாரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில வகை மது உற்பத்திகள் காலாவதியாகும் காலத்தை நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மது வகைகளின் விற்பனை சுமார் 30 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
உள்நாட்டு மதுபான விற்பனை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் உள்நாட்டு உற்பத்திகளை ஏற்றுமதி செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் சமன் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக