விடுவிக்கப்பட்டார் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் !
ஸ்ரீலங்கா ஜமாத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாஸ் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் கொழும்பு நீதவான் இன்று -08- விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவரது அடிப்படை உரிமை மீறல் மனு, உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவர் மீதான சகல குற்றச்சாட்டுகளையும் வாபஸ் பெறுமாறு பொலிஸ் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிற்கு அறிவுறுத்தியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்தார். இதனையடுத்து அவர் இன்று நீதவானால் விடுதலை செய்யப்பட்டார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் அவருக்கு எதிராக சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்திருந்தது.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டார்.
கருத்துரையிடுக