தேர்தல் செத்துவிட்டது; இறப்புச் சான்றிதழை எழுத வேண்டும் :மஹிந்த தேசப்பிரிய
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இறந்துவிட்டதாகவும், அதன் இறப்புச் சான்றிதழை எழுதுவதே இப்போது எஞ்சியிருப்பதாகவும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
காலி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதன்படி, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார். தேர்தல் ஆணைக்குழுவுக்கு வெளியே உள்ள விவகாரங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்றும், இதற்கு யார் பொறுப்பு என்று கூற முடியாது என்றும் அவர் கூறினார்.
மேலும் நிதி அமைச்சு ஒரு அத்தியாவசிய விஷயத்திற்காக நிதி வழங்க மறுக்கிறது. இந்த விவகாரம் ஆணையத்தின் எல்லைக்கு புறம்பானது என்பதால் இது ஒத்திவைக்கப்பட்டது.
கருத்துரையிடுக