500 கால்நடைகள்_3 மனித உயிர்களை காவுக்கொண்ட "மென்டவுஸ்"
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் மூவர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
அத்துடன், 15 பேர் காயமடைந்துள்ளதுடன், சுமார் 10000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வங்காள விரிகுடாவில் நிலைக்கொண்டுள்ள “மென்டவுஸ்” சூறாவளி காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் மழை, கடும் குளிர் மற்றும் கடும் காற்றுடனான வானிலை நிலவி வருகின்றது.
இந்த சீரற்ற வானிலையினால் 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.
2 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 2720 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
கருத்துரையிடுக