மீனவர்களை கரைக்கு திரும்புமாறு அவசர அறிவிப்பு

வடக்கு, கிழக்கு  மீனவர்களை கரைக்கு திரும்புமாறு விடுக்கப்பட்ட அவசர அறிவிப்பு

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக 60 கிலோமீற்றர் வேகத்தில் கற்று வீசுவதால் காங்கசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடுவோர் உடனடியாக கரைக்கு திரும்புமாறு வளிமண்டல திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வளிமண்டல திணைக்கள பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ் தெரிவித்தார்.

தென்கிழக்கு வங்ககடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழமுக்கம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் நிலைகொண்டுள்ளது.

இது மேற்கு வடமேற்கு திசையில் தொடர்ந்தும் நகர்ந்து கடந்த 24 மணிநேரத்தில் தென்மேற்கு வங்ககடலில் படிப்படியாக வலுவடைந்து காற்றழுக்க தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகம் புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றது

இதனால் நெட்டாங்கு 5 தொடக்கம் 20 பாகைக்கும் அதநான்னு 80 தொடக்கம் 90 பாகைக்கும் இடைப்பட்ட கடல்பகுதிகளில் காற்றின் வேகம் வலுத்து 50 தொடக்கம் 55 கிலோமீற்றர் வரை காற்று வீசக்கூடும்.

இவ் கடல் பிரதேசங்களில் சில சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் 60 கிலோ மீற்றர்வரை அதிகரிக்க கூடிய சந்தர்ப்பமும் காணப்படுவதுடன் கடற்பரப்பின் மேல் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.

காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட கடல் பரப்புக்களில் கடல் அலை 2 தொடக்கம் 3 மீற்றர்வரையில் காணப்படும்.

எனவே காங்கோசன்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளுக்கு மீனவர்களும் கடலில் பயணம் செய்வோரும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்;.

மேற்குறிய கடல் பகுதிகளில் மீன்பிடிப்பவர்கள்  உடனடியாக கரையோரங்களுக்கு திரும்பவும் அல்லது பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறித்தப்படுகின்றார்கள் இது தொடர்பாக வளிமண்டல திணைக்களத்தால் வெளியிடப்பட்ட முன்னறிவிப்புக்களை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தென் மேற்கு வங்காள விரிகுடாவிலும் அதன் ஒட்டிய வங்காள விரிகுடாவிலும் உருவாகி இருக்கின்ற தாழ் அமுக்கம்; காரணமாக நாட்டின் வடக்கு வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும்  அவ்வப்போது  மணித்திலாயத்திற்கு 40 தொடக்கம் 50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் வடக்கு வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஓரளவு மழை பெய்ய கூடும் நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான கால நிலை காணக்கூடும் என அவர் தெரிவித்தார்.

கருத்துகள்