மே.மா/ கம்/ அரபா மகா வித்தியாலயத்தில் புனரமைக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வுக்கூடம் 11. 11. 2022 வெள்ளிக்கிழமை மாணவர்களது பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இப் பாடசாலையில் சுமார் 12 வருட காலமாக சேவையாற்றிய முன்னாள் அதிபர் மர்ஹூம் A. A. M. ஜுனைத் அவர்களின் ஞாபகார்த்தமாக அன்னாரின் குடும்பத்தினரால் சுமார் எட்டு லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில் பிரதம அதிதியாக களனி, கம்பஹா வலய தமிழ் மொழி மூல பிரதி கல்வி பணிப்பாளர் M.T. M. Thouseer அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
அதிபர்,
மே.மா/கம்/அரபா ம.வி.
உடுகொட.
கருத்துரையிடுக