சர்வகட்சி அரசாங்கம் அமைந்த பின்னர் பதவி விலக தயார் - ரணில்

பாராளுமன்ற பெரும்பான்மையுடன் சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்த பின்னர், பிரதமர் பதவியை இராஜினாமா செய்யத் தயார் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அவசர கட்சித் தலைவர்கள் மாநாட்டில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


கருத்துகள்