நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்

பாடசாலை சேவையில் ஈடுபடும் பேருந்து மற்றும் சிற்றூர்ந்து ஆகிய வாகனங்களுக்கு இன்று பிற்பகல் 3 மணி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இலங்கை போக்குவரத்து சபை டிப்போ ஊடாக எரிபொருள் வழங்குமாறு போக்குவரத்து அமைச்சருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடி மற்றும் அது தொடர்பில் இனிவரும் காலங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று(23) முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை வழங்கினார்.

அதன்படி கல்வி, மீன்பிடி, சுற்றுலா, விவசாய நடவடிக்கை மற்றும் பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் மற்றும் அரச பேருந்துக்களுக்கும் அவசியமான எரிபொருளை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இலங்கை போக்குவரத்து சபை டிப்போ மற்றும் இராணுவ முகாம்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

அத்துடன் எரிபொருள் வரிசையில் இருந்து அதிக விலைக்கு வாகனங்களுக்கு சேகரிக்கப்படும் எரிபொருளை கடத்துவது குறித்தும் கவனம் செலுத்திய ஜனாதிபதி, சோதனைகளை விரிவுபடுத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் குழுக்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும், அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீடு முறையை உடனடியாக அமல்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.




கருத்துகள்