பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளிடமும் புதிய ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை!


பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டின் 08வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று (20) பாராளுமன்றத்தில் வைத்து நடைபெற்ற வாக்கெடுப்பில் தெரிவானதனை தொடர்ந்து ஆற்றிய விஷேட உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 

பிரிந்து நின்றது போதும் எனவும் புதிய நடைமுறை ஒன்றை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(Siyane News)



கருத்துகள்