நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் : பிரதமர் தினேஷ் குணவர்தன

நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் இணக்கம் காணக்கூடிய புதிய வேலைத்திட்டத்தின் கீழ் நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

எரிவாயு மற்றும் எரிபொருள் போன்ற அன்றாட தேவைகளை அடிப்படையாகக் கொண்ட நெருக்கடிகளை தீர்க்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் தினேஷ் குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.


கருத்துகள்