உடுகொட அறபாவின் புதிய கட்டிடத் திறப்பு விழா நாளை
நிட்டம்புவ, உடுகொட அறபா மகா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா நாளை (23) காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இக்கட்டிடம் குவைட் நாட்டின் தனவந்தர் அஷ்ஷெய்க் அஹ்மத் ஸாலிஹ் அல் கந்தாரியின் நன்கொடையின் கீழ் இலங்கையில் இயங்கும் அல் ஹிமா இஸ்லாமிய சேவை அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாடிககளைக் கொண்ட இக்கட்டிடத்தின் முதல் மாடியே இவ்வாறு பெரு விழாவின் மத்தியில் திறந்து வைக்கப்படுகின்றது.
இவ்விழாவில் பிரதம அதிதிகளாக குவைட் நாட்டின் தனவந்தர் அஷ்ஷெய்க் அஹ்மத் ஸாலிஹ் அல் கந்தாரி கலந்து சிறப்பிக்கவுள்ளார். விசேட அதிதியாக நகர திட்டமிடல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவுப் ஹக்கீமும், ஏனைய அதிதிகளாக மாகாண, வலய மட்ட கல்வி உயர் அதிகாரிகளும் பிரதேச அரசியல்வாதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
நிட்டம்புவ, உடுகொட அறபா மகா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா நாளை (23) காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இக்கட்டிடம் குவைட் நாட்டின் தனவந்தர் அஷ்ஷெய்க் அஹ்மத் ஸாலிஹ் அல் கந்தாரியின் நன்கொடையின் கீழ் இலங்கையில் இயங்கும் அல் ஹிமா இஸ்லாமிய சேவை அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாடிககளைக் கொண்ட இக்கட்டிடத்தின் முதல் மாடியே இவ்வாறு பெரு விழாவின் மத்தியில் திறந்து வைக்கப்படுகின்றது.
இவ்விழாவில் பிரதம அதிதிகளாக குவைட் நாட்டின் தனவந்தர் அஷ்ஷெய்க் அஹ்மத் ஸாலிஹ் அல் கந்தாரி கலந்து சிறப்பிக்கவுள்ளார். விசேட அதிதியாக நகர திட்டமிடல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவுப் ஹக்கீமும், ஏனைய அதிதிகளாக மாகாண, வலய மட்ட கல்வி உயர் அதிகாரிகளும் பிரதேச அரசியல்வாதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
கருத்துரையிடுக