புதிய காழி நீதிபதியாக எஸ்.எம். இப்றாஹிம் நியமனம்

புதிய காழி நீதிபதியாக எஸ்.எம். இப்றாஹிம் நியமனம்

- ஏ.எம். றிகாஷ்

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலக நிர்வாகப் பகுதிக்கு கடமை புரிவதர்க்காக 01.03.2023 ம் திகதி தொடக்கம் புதிய காழியாக பிரதம உள்ளக கணக்காய்வாளராக கடைமையாற்றி ஓய்வு பெற்ற *"சம்சுதீன் முஹம்மது இப்றாஹீம் "* நியமனம் பெற்றுள்ளார்கள் .

இவருடைய கடந்த 30ஆண்டு கால சேவைகளில் சம்மாந்துறை, சாய்ந்தமருது, நிந்தவூர் , இறக்காமம்,  கல்முனை பிரதேச செயலகங்கள் மற்றும் கல்முனை RDHS அலுவலகம், அக்கரைப்பற்று வலயக் கல்விக் காரியாலயத்தில் கணக்காய்வாளராக பணிபுரிந்ததோடு, கிழக்கு மாகாண சபையின் பிரதம உள்ளக கணக்காய்வாளராகவும், இறுதியாக மன்னார் மாவட்டச் செயலகத்திலிருந்துபிரதம உள்ளக கணக்காய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

தற்போது இவர் நீதிச்சேவை ஆணைக்குழு செயலாளர் மூலம் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலக நிர்வாகப் பகுதிக்குள். காழி நீதிபதியாக இந்நியமனத்தை பெற்றுக்கொண்டார்.

கருத்துகள்