கொழும்பில் வீதிகளில் பொலிஸாரால் துரத்தப்படும் ஆர்ப்பாட்டக்காரர்கள்!

TestingRikas
By -
0
கொழும்பில் வீதிகளில் பொலிஸாரால் துரத்தப்படும் ஆர்ப்பாட்டக்காரர்கள்!கொழும்பில் ஐ.நா காரியாலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் போன்று கொழும்பின் பல பகுதிகளில் சிறு சிறு குழுக்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொழும்பு ஐ.நா காரியாலப் பகுதியிலிருந்து துரத்தப்பட்ட நிலையில் மீண்டும் அப்பகுதிக்கு வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் பொலிஸாரால் துரத்தப்பட்டுள்ளனர். இதேவேளை தற்போது போராட்டக்காரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பொரளை பகுதியை நோக்கி செல்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.கொழும்பில் பிரதமர் காரியாலயத்திற்கு முன்பிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றதையடுத்து விகாரமகாதேவி பூங்காவில் ஒன்றுகூடி அங்கு எதிர்ப்பினை தெரிவித்த பின்னர் மீண்டும் ஐ.நா காரியாலயத்தை நோக்கி வருகை தந்த வண்ணம் இருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் அப்பகுதியில் மீண்டும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)