ட்விட்டர் நிறுவனத்தின் அனைத்து அலுவலக கட்டிடங்களும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடப்படும் என ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலகங்கள் வரும் திங்கட்கிழமை திறக்கப்படும் என ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் இரகசிய தகவல்களை பத்திரிகைகள் அல்லது வேறு இடங்களில் விவாதிப்பதை தவிர்க்குமாறு ஊழியர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், ட்விட்டரின் புதிய உரிமையாளரான உலகப் பணக்காரரான எலோன் மஸ்க், அந்நிறுவன ஊழியர்களுக்கு மற்றொரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
அதில், ட்விட்டர் ஊழியர்கள் “ஒரு நாளைக்கு அதிக நேரம் அதிக அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும், இல்லையெனில் அவர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறுவார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் உறுதிமொழி வழங்குவதற்கு நிறுவனத்தில் தங்க விரும்பும் ஊழியர்கள் உடன்பட வேண்டும் என மஸ்க் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று (17) அந்த உறுதிமொழிக்கு உடன்படாத ஊழியர்கள் மூன்று மாத ஊதியத்தை செலுத்திய பின்னர் வேலையை விட்டு வெளியேறலாம் என்று மஸ்க் கூறினார்.
“வெற்றி பெற நாம் மிகவும் உறுதியுடன் இருக்க வேண்டும்,” என்று அவர் தனது ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக