ஒரு மாதம் தங்குவதற்கு தயாரான நிலையில் கொழும்புக்கு வாருங்கள் - பொன்சேகா அழைப்பு

 

பொதுமக்களுக்கு ஒரு மாத காலம் கொழும்பில் தங்கியிருந்து செல்வதற்காக எதிர்வரும் 09 ஆம் திகதி கொழும்புக்கு வருமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கடந்த 09 ஆம் திகதியை போன்று எதிர்வரும் 09 ஆம் திகதியும் கொழும்பில் மக்கள் கூட்டம் ஒன்று திரளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்ச வேண்டாம் என்றும் பொதுமக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். - Siyane News

கருத்துகள்