எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து பஸ் கட்டணங்கள் அதிகரிக்கத் தீர்மானம்

எரிபொருள் விலை அதிகரிப்பை

தொடர்ந்து பஸ் கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


போக்குவரத்து அமைச்சர் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


அதற்கமைய, ஆகக்குறைந்த பஸ் கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த 30 சதவீத கட்டண உயர்வு ஜூன் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



கருத்துகள்