ராஜபக்சர்களால் வழங்கப்பட்ட பொய் வாக்குறுதிகளே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் - பிரதமர்

 


நாடு தற்போது நிலவும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு குறைந்தது ஒன்றரை வருடங்களாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். 

ராஜபக்ச குடும்பத்தவர்களால் வழங்கப்பட்ட பொய் வாக்குறுதிகளே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்று தெரிவித்த அவர் தன்னையும் அவர்களைப் போல முட்டாள் என்று அடையாளப்படுத்துவது தனக்கு பிடிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியை பொறுப்பேற்றதிலிருந்து நாட்டு மக்களுக்கு உண்மையை மாத்திரம் தெரிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (Siyane News)


கருத்துகள்