பிராந்திய காரியாலயங்களில் ஒருநாள் கடவுச்சீட்டு சேவை வழங்குவதற்கு நடவடிக்கை

 நாட்டிலுள்ள பிரதான நகரங்கள் சிலவற்றிலுள்ள குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தின் பிராந்திய காரியாலயங்களில் கடவுச்சீட்டு வழங்கும் ஒரு நாள் சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் யாழ்ப்பாண காரியாலயத்தை தன்னுடைய செலவில் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

தற்போது வெளிநாட்டில் வேலைவாய்ப்புக்காக செல்வதற்கு கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அதற்காக வரிசையில் சிரமப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே அவற்றுக்கு தீர்வை வழங்கும் நோக்கில் கண்டி, குருநாகல், மாத்தறை மற்றும் வவுனியா காரியாலயங்களில் ஒரு நாள் சேவை வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். (Siyane News)

கருத்துகள்