கொரோனா காலத்தில் முஸ்லிம்களின் உடல்களை எரித்து விட்டு கட்டார் நாட்டிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறார்கள் - ஹர்சண எம்பி (வீடியோ)

 


கட்டார் நாட்டிலிருந்து எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்கிறார்கள். ஆனால் கொரோனா தொற்று காலப்பகுதியில் தொற்று காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை முஸ்லிம் நாடுகள் பலவற்றின் கோரிக்கைகளையும் மீறி எரிப்பதற்கு தீர்மானித்தார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சண ராஜகருணா தெரிவித்தார்.

இன்று (29) எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இனவாதத்தை தூண்டுவதற்காகவே அரசாங்கம் அவ்வாறு செயற்பட்டது. இது போன்றே டாக்டர் ஷாபி விவகாரமும் இருந்தது. மற்றும் வன்த பெதி, வன்த கொத்து என்று கூறினார்கள். இந்த எரிபொருளுக்கும் வன்த எரிபொருள் என்று கூறாமல் இருக்கமாட்டார்களா? 

அந்த அரபு நாடுகளுக்கும் இங்குள்ள முஸ்லிம்களுக்கு செய்த விடயங்கள் ஞாபகத்தில் இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். (Siyane News)

සමගි ජන බලවේගය මාධ්‍ය සාකච්ඡාව

සමගි ජන බලවේගය මාධ්‍ය සාකච්ඡාව

Posted by SJB - Api on Tuesday, June 28, 2022

கருத்துகள்