ஆளும் கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச எதிர்வரும் ஜூலை 08 ஆம் திகதி தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளதாக சிரேஷ்ட கபினட் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளதாக அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அவ்வாறு அவர் பதவியேற்ற பின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஆகிய பதவிகளை பொறுப்பேற்கவுள்ளதாகவும் அந்த அரச ஊடகத்திடம் குறித்த அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Siyane News)
கருத்துகள்
கருத்துரையிடுக