நாட்டில் UNP பலம்வாய்ந்த கட்சியாக காணப்படுகிறது.

Rihmy Hakeem
By -
0

இன்னும் இரண்டு மாத காலம் அளவில் நாட்டில் இடம்பெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலுக்கு மக்கள் எதிர்பார்த்த அளவில் ஐக்கிய தேசிய கட்சி நாட்டில் அபிவிருத்திகளை முன்னெடுத்து இருப்பதாகவும் மக்கள் அதனை ஏற்று கொண்டுள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷான் வித்தானகே தெரிவித்துள்ளார். 

நேற்று நாவலப்பிட்டிய நகரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், இன்று மொட்டு கட்சியினராக இருந்தாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக இருந்தாலும் அரசியல் பலத்தை வைத்து கொண்டு எதிர் காலத்தில் இந்த நாட்டினை எவ்வாறு கொண்டு செல்லவேண்டும் என்பதை பற்றி நினைத்து பார்க்கவேண்டும். எமது நாட்டினை நல்லதொரு நிலமைக்கு கொண்டு செல்லவேண்டும் என எண்ணித்தான் ஐக்கிய தேசிய கட்சிய நாட்டில் இன்று பலம்வாய்ந்த கட்சியாக காணப்படுகின்றது. 

எமது நாட்டின் அபிவிருத்திக்கு இன்று வெளிநாடுகளில் இருந்தும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர். ஆனால் இன்று இந்த நாட்டு மக்களுக்கு எந்த ஒரு அரசியல் கட்சிகளின் மீதும் நம்பிக்கையில்லாமல் போய்விட்டது. அதனால் ஐக்கிய தேசிய கட்சி இன்று தனிச்சையான ஒரு ஆட்சியினை முன்னெடுக்க தயாராகியுள்ளது. 

எமது நாட்டு மக்களுக்கு சிறந்த ஒரு தலைவரை தேர்தெடுக்கும் நோக்கில் ஜே.ஆர் ஜயவர்தனவுடைய வரலாற்றை போல் ரணசிங்க பிரமேதாசவின் வரலாற்றை போல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் ஊடாக பாரிய அபிவிருத்தியினை இந்த நாட்டு மக்கள் தற்பொழுது எதிர்பார்த்த கொண்டிருக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார். 

(AdaDerana)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)